தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது. தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; 9,000 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் ஆகஸ்டுக்குள், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், மறைமுகமாக பல பேராசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இடமாறுதல் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த, உயர்கல்வித் துறைக்கும், கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கும், அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் மனு அளித்தது.
அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலர் சிவராமன் தலைமையிலான நிர்வாகிகளை, கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் நேற்று அழைத்து பேசினார். 'வரும், 26ம் தேதி முதல் 28 வரை இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 31 அரசு கலைக்கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்கள், இரண்டு வாரத்தில் நிரப்பப்படும்; 2007க்கு பின் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு, 7,000 ரூபாய் தர ஊதியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவித்தார் என, கல்லுாரி ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை