''வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்அதிகாரிகள் பதவிகளை ராஜினாமா செய்து வெளியேற வேண்டும்,'' என, மத்திய, சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த நிதின் கட்காரி கண்டிப்புடன் கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வருகின்றன.
பிரதமர் மோடி உத்தர வின் படி, உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்படப்பட்டுள்ளன. எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு வேகமாக செயல்பட்டால் தான் இலக்கை அடைய முடியும். ஆனால், அதை மறந்து, இன்னமும் பழைய பல்லவியை பாடிய படி, எதற்கெடுத்தாலும் நிர்வாக நெறிமுறைகளை காரணம் காட்டி, முன்னேற்றத்திற்கு இடையூறாக சில அதிகாரி கள் உள்ளனர்.
அவர்களை நான் எச்சரிக்கிறேன். மாறுங்கள்; இல்லையேல், வி.ஆர்.எஸ்., எனப்படும், தாங்களாக முன்வந்து பணியிலிருந்து ஓய்வுபெறும் திட்டத்தின் படி பதவியிலிருந்து வெளியேறுங்கள்; நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்காதீர்கள்.
இவ்வாறு, நிதின் கட்காரி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை