ஆத்துார் விரைவு நீதிமன்ற, 'மாஜிஸ்திரேட்,' தினமும் பணிக்கு சைக்கிளில் வருவதோடு, பள்ளி மாணவர்களுக்கு, 'லிப்ட்' கொடுப்பது, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், சேலம் மாவட்டம், ஆத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றுகிறார்.
ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வாடகை வீட்டில், குடியிருக்கும் இவர், அங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள நீதிமன்றத்துக்கு, தினமும் சைக்கிளில் வருகிறார்; சில நாட்களில், நடந்தும் வருகிறார்.
சைக்கிளில் செல்லும்போது, பள்ளி மாணவர்கள், 'லிப்ட்' கேட்டால் அவர்களை ஏற்றியும் செல்கிறார். எளிமையாக காணப்படும் இவர், பல நாட்களாக தேங்கிக் கிடந்த காசோலை வழக்குகளையும், விரைந்து தீர்த்து வைத்துள்ளதாக, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை