இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என்று, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படப் போகிறது என்று சிலர் வதந்திகளைப் பரப்புவதாக குற்றம்சாட்டினார்.
தேர்தல் வரும்போதெல்லாம் இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யத் தொடங்குவதாக குறிப்பிட்ட மோடி, அதை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.நவம்பர் 26-ம் தேதியை அரசமைப்புச் சட்ட நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்த அவர், அந்த நாளில் அரசமைப்புச் சட்டம் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் என்று கூறினார்.இதனிடையே, மும்பை இந்து மில்ஸ் வளாகத்தில், சட்டமேதை அம்பேத்கருக்கு நினைவிடம் அமைப்பதற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை