கிராம சுகாதார செவிலியர் காலி பணி யிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தயாரிக்க உள்ளதால், தகுதியுள்ள நபர்கள் தங்களது பதிவு விவரங்களை உறுதி செய்து கொள்ளு மாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவத் துறையில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணி யிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான பரிந்துரை பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தயாரிக்க உள்ளது. ஆகவே, தகுதியுடைய திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பெண் பதிவுதாரர்கள் தங்கள் பதிவு விபரங்களை, www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்.
தகுதியுடைய பெண் பதிவுதாரர்கள், தங்களது பதிவட்டை, கல்விச் சான்று, சாதிச் சான்று மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு, தங்கள் பதிவு விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம்.
கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை விவரங்கள், அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனங் களின் விவரங்கள் ஆகியவை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பல கையில் ஒட்டப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை