கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன.
இதை எதிர்த்து, தேவதாஸ் வழக்கு தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் பொறுப்பை பெற்றார்; தேவதாஸ் நேற்று ஓய்வு பெற்றார்.இதையடுத்து, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பையும் கவனிக்க, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி கல்வி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன் கூறும் போது, ''கூடுதல் பொறுப்பிலேயே இயக்குனர் நியமிக்கப்படுவதால், நிர்வாக பணிகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காலியிடங்களை நிரப்பவில்லை. பேராசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தவில்லை,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை