நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சாரவைக் கூட்டம் இன்று காலைதில்லியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூடத்தில், தொழிற்சாலை ஊழியர்களுக்கான பண்டிகைகால போனஸை உயர்த்தவும், தொழில் புரிவதை எளிதாக்க வணிக நீதிமன்றம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதியசட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த புதிய சட்டதிருத்த மசோதாவில், போனஸ் உச்சவரம்பை ரூ. 3,500-லிருந்து ரூ. 7,000-ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும், ரூ. 10,000 வரை ஊதியம் பெறுவோருக்கு மட்டுமே போனஸ் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றி ரூ. 21,000 வரை ஊதியம் பெறுவோருக்கு போனஸ் வழங்க சட்டதிருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.குளிர்கால கூட்டத்தொடர் குறித்து, இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை