பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும்' என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 13 கோடி குழந்தைகள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, 55 லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுகின்றனர். மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள் வராதது, உணவுப்பொருள் கிடைக்காதது, எரிபொருள் தீர்ந்து விட்டது போன்ற பல காரணங்களால், சில நேரங்களில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட முடியாமல் போகிறது.
அத்தகைய நிலைமை இனி ஏற்பட்டால், எத்தனை நாட்களுக்கு உணவு வழங்கப்படவில்லையோ, அந்த நாட்களுக்கான பணம், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும்.
இதற்கான விதிமுறைகள், 2013ல், அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ளன.அந்த விதிகளை இப்போதைய அரசு பின்பற்ற முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
மதிய உணவு திட்டத் தின் படி வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என்பதை, உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, அறிக்கை அளித்த பிறகு தான், மாணவர்களுக்கு பரிமாற முடியும்.
இந்த நடைமுறையும் விரைவில் பின்பற்றப்பட உள்ளது.இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை