நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 2005-06 கல்வியாண்டு வரை, தமிழ் மொழிப்பாடம் விருப்பப்பாடமாக இருந்து வந்தது. இதனால், அவரவர் தாய்மொழி அல்லது விருப்ப மொழிகளை பாடமாக எடுத்து படிக்கும் நிலை இருந்து வந்தது. கடந்த, 2006-07 ம் கல்வியாண்டு முதல், தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் வகுப்பில் துவங்கி, ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளில், தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், 2015-16ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், அனைத்து மாணவர்களும், தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயமாக தேர்வெழுத வேண்டும்.
சிறுபாண்மை மொழிப்பள்ளிகள் மற்றும் தமிழ் தாய்மொழியல்லாத மாணவ, மாணவியரும், பொதுத்தேர்வில், தமிழ் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சரிந்து விடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், குறைந்தபட்ச கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மொழி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி, அம்மாணவர்களுக்கு இக்கையேடுகளை வழங்கியும், சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யவும், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை