திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தற்போது தேர்வுகள் நடைபெறுவதால், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள்களை பெற்றுக் கொண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமணகுமார், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் செல்ல மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என கூறினாராம்.
அவசரமாக செல்ல வேண்டும் என மோகன்குமார் கூறியதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் லட்சுமணகுமார், மோகன்குமாரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த ஆசிரியர்
மோகன்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசிரியர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை