அரசு, இ - சேவை மையங்களில், ஆதார் அட்டையில், மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரியை மாற்றம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், தலைமைச் செயலகம்; 264 தாலுகா அலுவலகங்கள்; சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம்; 15 மண்டல அலுவலகங்கள்; 54 கோட்ட அலுவலகங்கள்; சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் என, 337 இடங்களில், அரசு இ - சேவை மையங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
இம்மையங்களில், பொதுமக்களிடம் இருந்து, 13.28 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4.36 லட்சம் பேருக்கு, பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 337 சேவை மையங்களிலும், ஆதார் அட்டையை பதிவு செய்யும்போது வழங்கிய, மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்றவற்றை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது; இதற்கான கட்டணம், 10 ரூபாய்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை