பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி வளாகத்திலேயே புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் ஆதார் அட்டை இல்லாதவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மு. நாகேந்திரன், கோட்டாட்சியர் அ. மனோகரன், வட்டாட்சியர்கள் செழியன், சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை