தமிழகத்தில் உள்ள, 42 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். விதிமுறைப்படி, இந்த மையங்களில், தலா, 42 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் என, 1.26 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 84 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்; 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை, அருகில் உள்ள சத்துணவு மையங்களுடன் இணைக்கவும், இங்கு பணிபுரிவோரை, பிற மையங்களில் உள்ள காலியிடங்களில் பணியில் அமர்த்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிநாதன் கூறுகையில், ''மாணவர்கள் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அவர்களுக்கு மற்றொரு மையத்தில் இருந்து சத்துணவு எடுத்து வந்து தருவது என்பது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த முடிவை அரசு கைவிடவேண்டும்,'' என்றார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை