விநாயகர் சதுர்த்தியான இன்று வழிபாட்டில் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடுவோம். இதற்கான காரணம் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை அகத்தியர் கமண்டலத்துடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அந்த கமண்டல நீரை தட்டி விட்டு பறந்தார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடத் தொடங்கியது. 'காகம் விரித்த நீர்' என்பதால் 'காவிரி' என்ற பெயர் அந்த ஆறுக்கு உண்டானது.
அகத்தியர் அந்தக் காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். தான் செய்த விளையாட்டுச் செயலை எண்ணிச் சிறுவன் சிரித்தான். காகமாக வந்து கமண்டல நீரை கவிழ்த்தவன் இவனே என்பதை அறிந்த அகத்தியர், அவனது தலையில் குட்ட முயன்றார்.
அப்போது சிறுவனான விநாயகர் தன் சுயரூபம் காட்டி நின்றார். தவறை உணர்ந்த அகத்தியர் தன் தலையில் குட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டார். தோப்புக்கரணத்திற்கு மற்றொரு புராண காரணமும் உண்டு. தேவர்களை அடிமைப்படுத்திய கஜமுகாசுரன், அவர்கள் தனக்கு தோப்புக்கரணம் இடவேண்டும் என உத்தரவிட்டான். அசுரனை வதம் செய்ய புறப்பட்ட விநாயகர், தன் தந்தத்தால் அவனை குத்திக் கொன்றார்.
விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் தேவர்கள் தோப்புக்கரணம் போடத் தொடங்கினர். அன்று முதல், பிள்ளையார் அப்பனுக்கு வழிபாட்டில் தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை