ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும் பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார்.
மேலும் தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் பட்டிமன்றம், சொற் பொழிவு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். படிப்பதற்காக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவிவருகிறார்.பார்வை இழந்தாலும் பாதை மாறாமல் பயணிக்கும் ஆசிரியர் முத்துசாமி, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் குடிகொண்டுள்ளது. அதை வெளிக்கொண்டுவருவது கல்வி மட்டுமே. குறைகளை எண்ணி தளர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி எப்போதும் நம் அருகில் தான் என்கிறார் புன்னகையுடன்...
இவரை வாழ்த்த: 97863 26166.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை