மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15-ஆம் கல்வியாண்டில் ஒரு மாணவருக்கான செலவுத் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.32,263 செலவாகிறது. இதில் அரசு மானியமாக ரூ.25,898 வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் உள்ளன. இதில் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்காக மத்திய அரசு ரூ.3,047 கோடியை மானியமாக கடந்த ஆண்டு வழங்கியது. அதோடு, பள்ளிகளின் இதர செலவுகளுக்காக ரூ.749 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
2013-14 நிதியாண்டில் ஒரு மாணவருக்கு ரூ.29,857 செலவிடப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் இந்தத் தொகை ரூ.32,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மாநில அரசு பள்ளிகளைப் பொருத்தவரை, ஒரு மாணவருக்கு தோராயமாக ரூ.6,500 வரை அரசு செலவிடுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை