மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், 915 பட்டதாரிகள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யாததால், அவர்களின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது.
விண்ணப்பித்தவர்களில், 44 பேருக்கு சரியான கல்வித் தகுதியில்லாததால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கல்வித்தகுதி இருந்தும், 915 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதில், 'தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதியான, பி.எஸ்சி., நர்சிங் படித்திருந்தும், 915 பேரும், அரசு வேலைக்கான நர்சிங் கவுன்சிலில் தங்களின் பட்டப்படிப்பை பதிவு செய்யவில்லை.
அதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்துள்ளது. நர்சிங் முடித்தவர்கள், அரசுப் பணியில் சேர, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்பது, தமிழக செவிலியர் பணிகள் சட்டப்படி கட்டாயமாகும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை