Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட, தமிழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41 ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இத்தேர்வு எழுதுவோருக்கான முழு நேரப் பயிற்சியை வழங்க, பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், www.b--u.ac.in/news.asp எனும் பல்கலை இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாநில மத்திய அரசு தேர்வு பயிற்சி மையம், பாரதியார் பல்கலை, கோவை - 641 046 எனும் முகவரிக்கு, வரும் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement