பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் மிகப்பெரிய அளவில் வளாக நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழக தொழில்நிறுவன ஒருங்கிணைப்பு மையம் பொறியியல் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்முகத்தேர்வுகளுக்கு (கேம்பஸ் இண்டர்வியூ) ஏற்பாடு செய்கிறது. இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்திலும், மாநில அளவிலும் வளாக நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மாநில அளவிலான வளாக நேர்முகத்தேர்வை டிசம்பர் மாதத்தில் 3 மண்டலங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாபெரும் வளாக நேர்முகத்தேர்வுகள் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடத்தப்படும். இதில், 5 பெரிய நிறுவனங்கள் கலந்துகொண்டு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை தேர்வுசெய்ய இருக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மாநில அளவில் 5 பெரிய நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்முகத்தேர்வுகள் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலமாக 2,500 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்துள்ளார். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் அதற்கு முன்னரே சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழில்நிறுவன ஒருங்கிணைப்பு மைய இயக்குநர் டி.தியாகராஜன் கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை