நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.
மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்; மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.இந்த விருதையும், அதற்கான நிதியையும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்திற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2.40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இந்த நிதியில், 11 ஆயிரம் பேருக்கு விருதுகள் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'இன்ஸ்பயர்' விருதுகள் வழங்குவது தொடர்பாக, பரிந்துரை செய்யப்படும் பள்ளிகளின் பட்டியலை, வரும், 15ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' அனுப்பலாம் என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை, inspirea wards-dst.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை