''என் சிறந்த ஆசிரியர், என் அம்மா; நான் பெற்ற அனைத்து வெற்றி களுக்கும் காரணம், என் அம்மா தான்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெருமிதத்துடன் கூறியுள்ளார். சிறந்த ஆசிரியராக பணியாற்றி, இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக ஆனவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்; இவர் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, பல துறைகளில் பிரபலமாக விளங்குபவர்களை, 'ஒருநாள் ஆசிரியராக' மாற்ற, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டார். இதன்படி, ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள, டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று, ஒரு மணி நேரம் பாடம் நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:சிறுவயதில், நான், பயங்கர குறும்புக்காரனாக இருந்தேன்.
என் வால் தனங்களை பொறுக்க முடியாமல், அம்மா, என்னை நன்றாக அடித்து விடுவார்; சிறிது நேரத்தில் சமாதானப்படுத்தி, அன்பு மழை பொழிவார். அம்மா தான், என் மிகச்சிறந்த ஆசிரியர். பள்ளியில் படிக்கும் போது, நான் சராசரி மாணவனாகத்தான் இருந்தேன். 5 கி.மீ., நடந்துதான் பள்ளிக்கு செல்வேன்; அதுபற்றி, என் தாயிடம் புகார் சொல்வேன். ஆனால், கஷ்டப்பட்டு நன்றாக படித்தால் தான், வாழ்வில் உயர முடியும் என, அவர் கண்டிப்புடன் சொல்வார்.என் அனைத்து சாதனைகளுக்கும், அவரே காரணம்.இவ்வாறு, ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி, மாணவர் களிடம் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை