தாய்-சேய் நல அலுவலர் பணியிடம் நிரப்புதல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 89 தாய்-சேய் நல அலுவலர் பணியிடங்கள், முதன் முதலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்படுகிறது. எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. நர்சிங் அல்லது பி.எஸ்சி. (பொது சுகாதார நர்ஸ்) படித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 20-ந் தேதி ஆகும்.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை