Ad Code

Responsive Advertisement

TNPSC : புள்ளியியல், அறநிலையத்துறையில் 171 பேருக்கு 31ல் 'இன்டர்வியூ'

புள்ளியியல் உதவி இயக்குனர் மற்றும் அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு, வரும், 31ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு புள்ளியியல் துறையில், 23 உதவி இயக்குனர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்து தேர்வில், 3,392 பேர் பங்கேற்றனர். அதில் தேர்ச்சி அடைந்த, 52 பேருக்கு, வரும், 31ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.அதேபோல், இந்து சமய அறநிலைய துறையில் செயல் அலுவலர் நிலை -- 3 பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 13 ஆயிரத்து, 660 பேர் பங்கேற்றனர்.
இதில் தேர்ச்சி பெற்ற, 119 பேருக்கும், வரும், 31ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement