கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளைஞர், தேசிய திறந்தநிலை பல்கலை தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதையடுத்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், மனித உரிமைகள், பேரிடர் மேலாண்மை, என்.ஜி.ஓ., மேலாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துறைகளில், பட்டயப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, சுற்றுலா துறைச் சார்ந்த பட்டயப் படிப்பில், தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பனாரஸ் இந்து பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அஜித்துக்கு, பல்கலையின் சார்பில், பட்டயச் சான்றிதழ், பாராட்டு பத்திரம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, அஜித் குமார் கூறியதாவது:நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உடையவன். சிறை கைதிகளுக்கு, கல்வி மிக அவசியம். அதன் மூலம் மட்டுமே அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை