பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, குழுத் தலைவராக நியமிக்கப்படுவர் .இவர்களுக்கு, தனியாக அடையாள அட்டை, பெயர், 'பேட்ஜ்' போன்றவை வழங்கப்படும். நன்றாக பேச, எழுத மற்றும் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசும் வகையிலானவர்களையே, இந்த சாம்பியன் பொறுப்புக்கு தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களின் மூலம், பாலின பிரச்னை இல்லாமல், மாணவ, மாணவியர் வேறுபாடு பார்க்காமல், சமூக, கல்வி நல திட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
'ஜென்டர் சாம்பியன்' பொறுப்புக்கு வருபவருக்கு பயிற்சி அளிக்க தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட், 31ம் தேதிக்குள் பெற்று, 'ஜென்டர் சாம்பியனை' நியமிக்க வேண்டும் என, யு.ஜி.சி.,யிலிருந்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை