ஊழல், அதிகாரிகள் வசூல் வேட்டையைத்தடுக்க, தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகார பணிகளை, 'ஆன்-லைன்' வழியில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுஉள்ளது. தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், புதிதாக ஏராளமான தனியார் பள்ளிகள் துவங்கப்படுகின்றன.
இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பள்ளிகளின் மாணவ, மாணவியர் பொதுத் தேர்வு எழுதும்போதோ, கட்டண நிர்ணயம் செய்யும் போதோ, விபத்துகள் ஏற்படும்போதோ அங்கீகாரம் குறித்து சர்ச்சை எழுகிறது.விதிமுறைகள்எனவே, அங்கீகாரம் வழங்குவதை முறைப்படுத்த, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம், ஆன்-லைனில் அங்கீகாரம் தரும் முறையை பின்பற்றி, பள்ளிகளின் அங்கீகாரத்தை, ஆன்-லைனில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
புதிய நர்சரி, பிரைமரி, பிளே ஸ்கூல்கள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரவும், புதுப்பிக்கவும், புதிய, ஆன்-லைன் தளம் உருவாக்க திட்டம் உள்ளது.இதுகுறித்து, பள்ளி உரிமையாளர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் விவாதித்து, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த முறையால், லஞ்சம் கொடுத்து அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரத்துக்காக பள்ளிகளை அரசியல்வாதிகள் மிரட்டுவது போன்ற பிரச்னைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை