ராமேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்புக்கு பாடம் எடுக்க மறுத்த இரு ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் இல்லாத 5ம் வகுப்பிற்கு ஆங்கிலம், அறிவியல் பாடம் நடத்திட ஆசிரியர்கள் ஜெரோம், ஜலீலாவுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். அதற்கு," நாங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியில் பாடம் நடத்த முடியாது' என கூறியுள்ளனர். இதுகுறித்தும், பொதுமக்கள் அளித்த புகார் குறித்து விசாரித்த மாவட்ட கல்வி அதிகாரி, இரு ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிக(டெப்டேஷன்) இடமாற்றம் செய்தார். பின் ஆசிரியர்களுக்கு நடந்த கலந்தாய்வில், இரு ஆசிரியர்களும் அதே புதுரோடு பள்ளிக்கு இடமாற்றம் பெற்று, கடந்த ஆக. 18 தேதி பணியில் சேர்ந்தனர். இதனை கண்டித்து, நேற்று மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி கிடந்தது.
பள்ளி கிராம கல்வி குழு தலைவர் பஞ்சவர்ணம் கூறியதாவது: ஆசிரியர் ஜெரோம் மீது மாணவிகள் கொடுத்த புகாரின் படி, அவரை நாங்களும் பலமுறை கண்டித்தோம். பள்ளி வளர்ச்சிக்கு அக்கறை காட்டாமல், 5ம் வகுப்பில் பாடம் நடத்த மறுத்த ஜெரோம், ஆசிரியை ஜலீலாவை வேறு பள்ளிக்கு மாற்றினர். இருவர் மீது புகார் இருந்த நிலையில் ஆக. 18 தேதி மீண்டும் இதே பள்ளியில் சேர்ந்தனர். இதனை கண்டித்தும், இருவரையும் இடமாற்றம் செய்யக் கோரியும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினோம் என்றார். உதவி தொடக்க கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி கூறியதாவது: பள்ளிக்குள் ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இரு ஆசிரியர்கள் மீது புகார் வந்துள்ளது. சில புகார்களுக்கு ஆதாரம் இல்லை. இருப்பினும், பிரச்சனைக்கு தீர்வு காண அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை