'அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், ஜூன் மாதம் முதலே கல்வி ஆண்டு கணக்கில் எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த 8ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை, கல்வி ஆண்டாக எடுத்துக் கொண்டு, இட மாறுதல் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த அடிப்படையில் இன்று, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. உடற்கல்வி மற்றும் கலை ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, இடமாறுதல் பெற்று ஓர் ஆண்டு பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் கவுன்சிலிங் நடந்ததால், அப்போது இடமாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. ஆனால், ஆகஸ்ட் மாத கணக்குப்படி நடத்தினால், கடந்த ஆண்டு இடமாறுதல் வாங்கியவர்கள், மீண்டும் இந்த ஆண்டு இடமாறுதல் பெற முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை