மக்களவையில் பேசிய அருண் ஜேட்லி நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை, நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும். அத்து டன், 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் போது இந்த செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகை 9.56 சதவீதம் அதி கரித்து ரூ.1 லட்சத்து 619 கோடி யாக அதிகரிக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.
வரும் 2016-17-ம் ஆண்டு 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 15.79 சதவீத அளவுக்கு (ரூ.1.16 லட்சம் கோடி) இந்தத் தொகை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இத் தொகை 2017-2018-ம் ஆண்டில் ரூ.1.28 லட்சம் கோடியாக உயரும்.
அதேபோல் ஓய்வூதியதாரர் களுக்கு வழங்கப்படும் தொகை யும் நடப்பு நிதியாண்டில் ரூ. 88,521 கோடியாக உயரும். வரும் 2016-17-ம் ஆண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும் 2017-18-ம் ஆண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாகவும் ஓய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும். இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை