Ad Code

Responsive Advertisement

மாணவியருக்கு பாலியல் தொல்லை:அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 'ஆயுள்'

புதுச்சேரியில், இரண்டாம் வகுப்பு மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியருக்கு, ஆறு ஆயுள் சிறை தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார், 30; திருக்கனுார் அடுத்த, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தார்.

கடந்த, 2013ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த இவர், மூன்று மாணவியரை தனியே அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்ததும், அவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.சி.இ.ஓ., கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள், துறை ரீதியாக விசாரித்ததை தொடர்ந்து, ரவீந்திரகுமார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.புகாரை அடுத்து, சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைப் பிரிவில், திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து, ரவீந்திரகுமாரை சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை, புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கார்த்திகேயன், ரவீந்திரகுமாரை குற்றவாளி என தீர்மானித்து, அவருக்கு ஆறு ஆயுள் சிறையும், மூன்று பத்தாண்டு சிறையும், மூன்று ஏழாண்டு சிறையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரவீந்திரகுமார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement