Ad Code

Responsive Advertisement

டிப்ளமோ நர்சிங் படிப்பு 31 முதல் கலந்தாய்வு

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 31ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. இதற்கு, 9,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 31ல் துவங்கி, செப்., 2ம் தேதி வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.'மாணவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன் கலந்தாய்வுக்கு, அசல் சான்றுகளுடன் வர வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhelth.org என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement