பெங்களூரு: மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, சில தனியார் பள்ளிகள், 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கல்வி ஆய்வு மையம் மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாக கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.
மாணவர்களின் பெற்றோர், ஓட்டுப் போட்டு விட்டு, அடையாள மை இருக்கும் கை விரலை பள்ளியில் காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு, இரண்டு மதிப்பெண் கிடைப்பது உறுதி. இதற்காக, சில பள்ளிகள், 22ம் தேதியன்று, பள்ளியில் தனி கவுன்டர் திறக்கவும் தீர்மானித்துள்ளன.
தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர் சசிகுமார் கூறுகையில், “படிக்காதவர்களை விட, படித்தவர்களே ஓட்டுப் போடுவதில் பின்தங்கி இருக்கின்றனர். இதனால் ஓட்டு சதவீதம் குறைகிறது. அதனால், ஓட்டுப் போடுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, 'ஓட்டுப் போடுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை துவங்கிஉள்ளோம்,” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை