பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் தேர்வு எழுதுவோர், பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியில் தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்களுக்கு
செப்டம்பர் 28 முதல் தேர்வுகள் துவங்க உள்ளன.
தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10 வரை தேர்வு நடைபெற உள்ளது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஆண் தனித்தேர்வர்களுக்கும், பெண் தனித்தேர்வர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்தனி சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் ஆகஸ்ட்13 முதல் 19 வரை மாலை 5.45 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம். மறுமுறை தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், இதர கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும்.
நேரடி தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.187. இதனுடன் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை