'குரூப் - 2 நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, வரும், 24ம் தேதி முதல் கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:குரூப் -- 2 நேர்முக தேர்வு பதவிகளில், 1,136 காலியிடங்களை நிரப்ப, முதன்மை எழுத்துத் தேர்வு, 2014 நவ., 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, ஜூலை 15ம் தேதி முதல், ஆக., 8ம் தேதி வரை, நேர்காணல் நடந்தது; அதில் தேர்வானவர் விவரங்கள், ஆக., 10ம் தேதி வெளியிடப்பட்டன. நேர்காணலில் பங்கேற்ற, 2,222 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு, ஆக., 24ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும்.
எப்போது கலந்தாய்வு என்ற விவரம், அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.கடிதம் வராதவர்கள், தேர்வாணைய இணைய தளத்தில் கடித நகலை பதிவிறக்கம் செய்து பங்கேற்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில், வர தவறினால், கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை