தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 'இந்த காலியிடங்களுக்கு, பட்டதாரிகள் அல்லது உபரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
50 ஆண்டுக்கு முன்...:
இந்த பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவியால், 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கு, கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு, தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். மீதமுள்ள, 1,400 பள்ளிகள், 25 முதல், 50 ஆண்டுகளுக்கு முன், நேரடியாக நடுநிலைப் பள்ளிகளாகத் துவங்கப்பட்டதால், மத்திய அரசு உதவித் திட்டத்தில் இடம் பெறவில்லை.
பற்றாக்குறை:
நடுநிலைப் பள்ளிகளுக்கு, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; வகுப்புக்கு ஒரு ஆசிரியர்; கணிதம்,
ஆங்கிலம் மற்றும் அறிவியலுக்கு, தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், எஸ்.எஸ்.ஏ., உதவி இல்லாத பள்ளிகளில், இந்த விதிகள்கடைபிடிக்கப்படாமல், ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்த, இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
சில பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தாலும், ஒரே பாடத்தை முடித்தவர்களாக உள்ளதால், ஆசிரியர்களை நியமித்தும் பலனில்லை. அதனால், கணிதம் முடித்தவர்கள், தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தையும், அறிவியலையும் கற்றுக் கொடுக்கின்றனர். சில பள்ளிகளில், மூன்றுமே, தமிழ் ஆசிரியர்களாகவும், சில இடங்களில், மூன்று பேருமே வரலாறு
ஆசிரியர்களாகவும் உள்ளதால், 'குண்டக்க, மண்டக்க' என்ற நிலையில், பாடம் எடுக்கப்படுகிறது.
கலந்தாய்வு:
இப்பள்ளி மாணவர்கள், 9ம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு மாறும் போது, கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களின்
அரிச்சுவடி கூடத் தெரியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பணி நிரவல் அல்லது கலந்தாய்வு மூலம், தீர்வு காண முயற்சிக்கிறோம்' என்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் சிங்காரவேல் கூறும்போது, ''எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் வராத பள்ளிகளிலும், ஒவ்வொரு பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்; வகுப்புக்கு தலா ஒரு ஆசிரியர் என, நியமிக்க வேண்டும். அப்போது தான், உபரி ஆசிரியர் பிரச்னை தீருவதோடு, மாணவர்களும் பாதிக்கப்படாத சூழல் ஏற்படும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை