Ad Code

Responsive Advertisement

135 ஆசிரியர்கள் விருப்ப இடமாற்றம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில், 135 பேர் விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெற்றனர். இந்த பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த, 29ம் தேதி துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில், 'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டும், ஆன் - லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

மொத்தம், 861 பேர் விண்ணப்பித்தனர். கலந்தாய்வில், 179 பேர்பங்கேற்கவில்லை. 547 பேர் விரும்பிய இடம் கிடைக்காததால் இடமாறுதலை கைவிட்டனர். 135 பேர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement