பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சில தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு, உடனடி துணைத் தேர்வு நடத்தப்பட்டது.தற்போது, அனைத்து தேர்வு முடிவுகளும் வெளிவந்து, மேல்நிலை மற்றும் தொழிற்கல்விக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் மறு கூட்டல், மறு மதிப்பீடு, துணைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், திருத்தப்பட்ட அசல் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுத் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை