Ad Code

Responsive Advertisement

காலதாமதத்தை தவிர்க்க... பாஸ்போர்ட் நடைமுறையில் அதிரடி மாற்றம்... : ஆன்லைனில் போலீஸ் விசாரணை நடத்த முடிவு...

     பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் விசாரணையை ஆன்லைன் மூலமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் குற்றப் பிண்ணனி குறித்து உள்ளூர் காவல் நிலையங்கள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதனால் பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஆன்லைனில் போலீஸ் விசாரணை நடத்தலாம் என மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.


பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் தேசிய மக்கள் தொகை பதிவகம், ஆதார் அட்டை எண் ஆகியன மூலம் குற்றப்பதிவியல் இணையம் வாயிலாக சரி பார்க்கப்படும். இதற்கான வசதி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்ட காவல் அலுவலகங்களை தேசிய குற்ற பதிவியில் காப்பகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் போலீஸ் விசாரணை முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிரடி மாற்றத்தால் தற்போது சுமார் 1 மாத காலம் வரை எடுத்துக் கொள்ளப்படும் போலீஸ் விசாரணை, ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்படும். ஆன்லைன் போலீஸ் விசாரணை கடந்த மாதம் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement