Ad Code

Responsive Advertisement

உயிருக்கு போராடும் சிறுவனின் 'பைலட்' ஆசை

 'பைலட்'டாகி, விமானத்தில் பறக்க வேண்டும்' என்ற, 11 வயது சிறுவனின் ஆசையை, சூலுார் விமானப்படை அதிகாரிகள் நிறைவேற்றினர். 'தலசீமியா' எனும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் முகிலேஷ், 11, கோவை, ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், 'கீமோதெரபி' சிகிச்சை பெற்று  வருகிறான். 


அனுமதி:
பைலட்' ஆகி, விமானத்தில் பறக்க வேண்டும் என்ற தன் ஆசையை, பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்தான். இதை, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் 'மேக் ஏ விஷ்' பவுண்டேஷன் நிர்வாகிகளிடம், பெற்றோர் தெரிவித்தனர். சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்கும்படி, சூலுார் விமான படைத்தள ஏர் கமோடர் உமேஷ் குமாரிடம் கோரிக்கை விடப்பட்டது. 

அதை ஏற்ற அதிகாரிகள், சிறுவனின் ஆசையை நிறைவேற்ற அனுமதியளித்தனர். கேப்டன் குப்தா தலைமையிலான குழுவினர், சிறுவன் விமானத்தில் பறப்பதற்கான ஏற்பாடுகளை, நேற்று முன்தினம் செய்தனர். சீருடை, பேட்ஜ், தொப்பி சகிதமாக, விமானத்தில் ஏறிய சிறுவனுக்கு, விமானப்படை வீரர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கைகுலுக்கி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, 'பைலட்' இருக்கையில் சிறுவன் முகிலேஷ் அமர, விமானம் கிளம்பி பறந்தது. சிறுவன் திருப்தி அடையும் வரை பறந்த விமானம், மீண்டும் விமான தளத்துக்கே திரும்பி வந்தது. 

விமானத்தில் பறந்த சிறுவன், மிகுந்த பெருமிதத்தோடு இருந்ததாகவும், மகன் ஆசையை நிறைவேற்றிய திருப்தியில், பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அதிகாரிகள் 
தெரிவித்தனர். 


மகிழ்ச்சி:


இதையடுத்து, விமானப்படை அருங்காட்சியகத்தையும் சிறுவன் பார்வையிட்டான். அதிகாரிகளுடன் மிக உற்சாகமாக பேசிய சிறுவன், 'சரங்' ஹெலிகாப்டர் உள்ளே அமர்ந்து, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தான். சிறுவனின் பைலட் ஆசையை நிறைவேற்றியதில், பெற்றோர், விமானப்படை அதிகாரிகள், மருத்துவமனை மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சிஅடைந்தனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement