Ad Code

Responsive Advertisement

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு சலுகை விலையில் தலைக்கவசம்

சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு சலுகை விலையில் தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை புதன்கிழமை வரை நடைபெறுகிறது.தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதை பின்பற்றும் வகையில், தலைக்கவசம் வாங்குவதற்காக மக்கள் அலைமோதுகின்றனர். 

இதனால், அதன் விலையை விற்பனையாளர்கள் பன்மடங்கு உயர்த்தியுள்ளனர்.இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு குறைந்த விலையில் தலைக்கவசம் கிடைப்பதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 10 சதவீத சலுகை விலையில் தலைக்கவசம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை புதன்கிழமை (ஜூலை 1) வரை நடைபெறும். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமைச் செயலக ஊழியர்கள், சலுகை விலையில் தலைக்கவசம்வாங்கிச் சென்றுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement