வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அரசு கட்டடங்களில் சேதமடைந்துள்ள மழைநீர்சேகரிப்பு அமைப்பை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மாநிலம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது. வீணாகும் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. இத்திட்டத்தை தொடர வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக அரசு கட்டடங்களில் சேதமடைந்துள்ள மழைநீர் சேகரிப்பை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அரசு கட்டடங்களில் குழாய் சேதம் உள்ளிட்ட காரணங்களினால் சேதமடைந்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து பொதுப்பணித்துறையினர் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அவை சீரமைக்கப்படும். மழைநீரை கூடுதலாக பூமியில் சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்படும்,”என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை