ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்து, புதன்கிழமை ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.18,864-க்கு விற்பனையானது.
அதன் பின்னர், தங்கம், வெள்ளி விலை படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில், ஜூலை மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை சரிவைக் கண்டு வருகிறது. திங்கள்கிழமையன்று, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.256 குறைந்து, ரூ. 19,216-க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.136-ம், புதன்கிழமை 216-ம் குறைந்து காணப்பட்டது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.608 வரை குறைந்துள்ளது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், ஐரோப்பிய பங்கு சந்தையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக, 1,225 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், புதன்கிழமை 1,092 டாலர்களாக குறைந்தது. இதுவே பிரதான காரணமாகும்.
பொதுவாக, ஆடி மாதத்தில் தங்கத்தின் தேவை குறைவாக இருப்பதால், அவற்றின் விலை குறைந்திருக்கும். அந்த மாதத்தின் 2-ஆவது வாரத்திலிருந்து, மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கும். இதே நிலை கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அடுத்து வரும் நாள்களில், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார் அவர்.
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,358
ஒரு பவுன் தங்கம் 18,864
ஒரு கிராம் வெள்ளி 36.20
ஒரு கிலோ வெள்ளி 33,825
செவ்வாய்க்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,385
ஒரு பவுன் தங்கம் 19,080
ஒரு கிராம் வெள்ளி 36.40
ஒரு கிலோ வெள்ளி 34,030
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை