Ad Code

Responsive Advertisement

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு களுக்கான பொது கவுன்சிலிங், நாளை முடிகிறது.மொத்தமுள்ள, 2 லட்சத்து, 5,000 இடங்களில், நேற்று வரை, 94 ஆயிரம் இடங்கள் நிரம்பின.


தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. அது முடிந்து, காலியாக இருக்கும் இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ல் நடத்தப்படுகிறது.பிளஸ் 2 துணைத் தேர்வில், வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள், இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். அனைத்து சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, 'https://tnea.annauniv.edu/tnea2015/press.php' என்ற, அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement