நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இதில் தமிழக கல்வியியல் கல்லூரி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தேசிய கல்வியியல் கல்லூரி கவுன்சில் பி.எட், எம்.எட்., படிப்புகளை 2 ஆண்டுகளாக தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பி.எட், எம்.எட்.படிப்புகள் 2 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்லூரியில் என்னென்ன வசதிகளை மாணவர்களுக்கு செய்ய வேண்டும் என்றும் பாட திட்டங்களை எப்படி வகுத்து நடத்திட வேண்டும் என்று பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு கல்லூரியில் குறைந்த பட்சம் 16 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். கல்லூரி 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும். விடுதி வசதி முன்பு இருந்தது போல் 2 மடங்காக இருக்க வேண்டும்.
பி.எட்.படிப்புக்கு முதலாமாண்டு 7 படங்கள் இருந்தது. தற்போது முதலாமாண்டுக்கு 9 படங்களும், இரண்டாமாண்டுக்கு 7 பாடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.எட்.படிப்பில் முதலாமாண்டு 6 பாடங்கள், இரண்டாமாண்டுக்கு 6 பாடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிறந்த கல்வி கொடுப்பதற்காக இந்தாண்டு முதல் யோகா, கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இசை, ஓவியம், நடனம் கூடுதல் பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்பிக்கும் திறன் அதிகரிக்கும். செய்முறை பயிற்சி வகுப்பு 40 நாட்களில் இருந்து 100 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பதிவாளர் கலைசெல்வன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை