Ad Code

Responsive Advertisement

இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்

இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.

அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.


*குமாரபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தொழிற்கல்வி மாணவர்களின் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம்; பிற்படுத்தப்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
* தர வரிசையில், கோவை, சூலுாரைச் சேர்ந்த கீர்த்திபாலன், முதலிடம் பெற்றுள்ளார். இவர், திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளி மாணவர். 
*சாதனை நிகழ்த்திய நிஷாந்த் ராஜன், முகேஷ் கண்ணன், நிவாஷ், சரவணக்குமார், பிரவின்குமார், மோனிஷ், மோகன்குமார் மற்றும் ராம் அஸ்வந்த் ஆகிய எட்டு பேர் மருத்துவ தர வரிசை பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளனர்; மருத்துவம் படிக்க உள்ளனர்.
*அவினாசி வெள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கிரிதரன், ஈரோடு குருகுலம் பள்ளி மாணவர். 
*ஈரோடு மாவட்டம் ஏலவாமலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகியோர், அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
*மதுரை பி அண்ட் டி நகரைச் சேர்ந்த மாணவர் சுகைல் அகமது, 199.75 'கட் - ஆப்' எடுத்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனப் பிரிவிலும்; சேலம் ஆத்துாரைச் சேர்ந்த இசைப்பிரியா, 199.25 எடுத்து, ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவிலும்; கொல்லிமலையைச் சேர்ந்த தனசேகர், 197.50 எடுத்து, பழங்குடியினர் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளனர். 
*தொழிற்கல்விப் பிரிவில், கோவை காராமடையைச் சேர்ந்த மனோஜ், முதலிடம் பிடித்துள்ளார். ஈரோடு, சிக்கரசம் பாளையம் தினேஷ் குமார்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ரோகிந்த் போஸ் ஆகியோர் முறையே, மூன்று, நான்காம் இடங்களை பெற்றுள்ளனர்.

முழுமையான தர வரிசைப் பட்டியல், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜி., படிப்புக்கு மாணவியர் 'குட்பை':

இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.50 லட்சம் பேரில், 57,990 பேர் மாணவியர். ஆனால், இந்த ஆண்டு தர வரிசைக்கான முதலிடம்பட்டியலில், மாணவியர் மிக சொற்பமாகவே இடம் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு பிளஸ் 2வில், உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், அந்தப் பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது.அதனால், 'கட்- ஆப்' மதிப்பெண்ணும் குறைந்து விட்டது. கணிதம், பயாலஜி படித்த மாணவியரில், 195 முதல், 200 வரை, 'கட் - ஆப்' பெற்றவர்கள் மருத்துவம் நிச்சயம் கிடைக்கும் என்று அதற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால், இன்ஜினியரிங் பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை.அதேநேரம், இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில், 190க்குக் கீழ் அதிக மாணவர்கள், 'கட் - ஆப்' பெற்றுள்ளதால், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரித் தேர்வில் கடும் போட்டி இருக்கும்.இந்த ஆண்டு, 22,500 பேர், 190 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 21,280 பேர் பெற்றனர்.இந்த ஆண்டு, 28,129 பேர், 188 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 26,300 பேர் தான் பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
"

மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும் போது, அவர்களை 
வரிசைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கலைப் போக்க, 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 124 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு, 80 பேருக்கு 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும்
ரைமண்ட் உத்தரியராஜ் 
தமிழ்நாடு இன்ஜினியரிங் 
மாணவர் சேர்க்கை செயலர்

இன்ஜினியரிங் தர வரிசைப் பட்டியலில், முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே, இயந்திரங்களின் செயல்பாடு மீது, அதிக ஆர்வம் இருந்ததால், மெக்கானிக்கல் பிரிவில் படிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கு காரணமான, நான் படித்த உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சாருமதிக்கு நன்றி கூற விரும்புகிறேன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement