தமிழக அரசு புதிதாக துவக்கியுள்ள, ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான எம்.சி.ஐ., பரிந்துரைத்து உள்ளது. மத்திய அரசு அனுமதி, சில நாட்களில் கிடைக்கும் என்பதால், திட்டமிட்டபடி, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.
200 கோடி ரூபாய்:இங்கு, புதிதாக மருத்துவக் கல்லுாரியை அரசு துவக்கி உள்ளது; இதற்காக, 200 கோடி ரூபாய் செலவில், கட்டுமானப் பணி முடிந்து, கல்லுாரி தயாராக உள்ளது. இந்த கல்லுாரி செயல்பட, எம்.சி.ஐ.,யின் அனுமதி தேவை; இதற்கான பிரத்யேக குழு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை திருப்தியளிப்பதாக தெரிவித்த, எம்.சி.ஐ., '100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்து உள்ளது. பரிந்துரை அளித்து, 15 நாட்களுக்கு மேலாகியும், மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
எம்.சி.ஐ., பரிந்துரை:இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரி கூறியதாவது:எம்.சி.ஐ., பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசு அனுமதி தரும்; அதில், எந்த சிக்கலும் இல்லை; அனுமதிக்கடிதம், எந்த நேரத்திலும் கிடைக்கும். இந்த கல்லுாரி, அரசின், 20வது மருத்துவக் கல்லுாரியாக செயல்படும். திட்டமிட்டபடி, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர் சேர்க்கப்படுவர்.
இதனால், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., எண்ணிக்கை, 2,650 ஆக உயர்கிறது. மாநிலத்திற்கு கிடைக்கும், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,172ல் இருந்து, 2,257 ஆக உயரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை