அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரம்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படி மிக கூடுதல் என்றும், இதனுடன் நிதியுதவி பள்ளிகளுக்கான பிற செலவினங்களும் அதிகம் என்றும் அரசு கருதுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை தவிர்க்க தற்போது அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை மிகதுல்லியமாக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. எனவே, அரசு நிதியுதவி பள்ளிகளை நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமுதாய அமைப்புகள் அனைத்தும் தங்கள் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு திரும்ப பெறும் ஆசிரியர்கள் காலியாக உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை