அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பாஸ்போர்ட் மண்டல அலுவலக அறிக்கை:பொதுத் துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பாஸ்போர்ட் பெற, அரசின் தடையின்மை சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆனால், சில அரசு அலுவலகங்களில், தடையின்மை சான்று பெற, நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் நெருக்கடி நிலவுகிறது.
இதை கருத்தில் கொண்டு, 'அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, தடையின்மை சான்றிதழ் தேவையில்லை' என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதற்கு மாற்றாக, தடையின்மை சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது குறித்து, படிவம், '௪' மூலம் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.
அதன் நகலை, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால், போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். ஊழியர் அளிக்கும் முன்னறிவிப்பு பற்றி, அரசு அதிகாரிக்கு ஆட்சேபனை இருந்தால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, நேரில் சென்று தெரிவிக்கலாம்.பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய படிவங்களை, பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை