ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களுக்குள் கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் ஆகியோர் செல்லிடப்பேசி மற்றும் மின்னனு சாதன பொருள்கள் கொண்டு செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்வை நேர்மையான முறையிலும், வெளிப்படைத்தன்மையாகவும் நடத்தப்பட உள்ளது. இப்பணித் தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் அன்றைய நாளில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வாகனத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்களை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்குள் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர் மற்றும் தேர்வர்கள் ஆகியோர் உள்பட யாரும் செல்லிட பேசி மற்றும் மின்னனு சாதன பொருள்கள் ஆகியவைகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. மேலும், தேர்வர்கள் கருப்பு அல்லது ஊதா நிற பந்து முனைப்பேனாக்களை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.
அதனால், தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும். அதேபோல், 10.10 மணிக்கு மேல் வருவோரை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. தற்போது, இத்தேர்வுக்கான பணிகளில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை