''கோவை பாரதியார் பல்கலை, தொலைமுறை கல்வி தேர்வு மையங்களை கண்காணிக்க, 'வெப் கேமரா' பொருத்த திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை தெரிவித்தார்.
அவர், திருச்சியில் நேற்று கூறியதாவது: பாரதியார் பல்கலை தொலைமுறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், பல்வேறு படிப்புகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. நாடு முழுவதும், 670 மையங்களை, பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது. இதன் மூலம் தொலைமுறை பாடப்பிரிவுகள் மற்றும் கட்டணம் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், வேலைவாய்ப்புக்கும், இந்த மையங்களுக்கும் தொடர்பு இல்லை. திருச்சியில், நான்கு மையங்கள் இயங்கி வருகின்றன. திருச்சியில், கோவை பாரதியார் பல்கலை தொலைமுறை கல்விக்கு, கிளை அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், அந்த அலுவலகத்தில் பணிக்கான நேர்முகத்தேர்வு, பணி நியமனம் செய்வதாகவும் புகார் வந்துள்ளது. அப்படி ஒரு கிளை அலுவலகம் திருச்சியில் இல்லை. இதை நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து, புகார் எதுவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை. பல்கலையில் உள்ள ஆங்கில பேராசிரியர் மூலம் தகவல் தெரிந்தது. வரும் காலத்தில், தொலைமுறை கல்வியில் தேர்வு எழுதுகிறவர்களுக்கு, ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கவும், தேர்வு மையங்களில் வெப் கேமரா வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை